தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம், புத்தகம் வெளியீடு – (24.12.2023)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

♦தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி – 8)’ புத்தகத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம். அப்துல்லா வெளியிட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழகம்

♦தந்தை பெரியார் நினைவிடத்தில் ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த மூடநம்பிக்கை நிர்மூலன் சமிதி அமைப்பின் தலைவர் முனைவர் பைரி நரேஷ் தலைமை யில் பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம்

♦ தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், ச. இன்பக்கனி ஆகியோர் முன்னிலையில், திராவிடர் கழக மகளிரணித் தோழர்கள் சூழ மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக அண்ணாசாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து அமைதி ஊர்வலம் புறப் பட்டது. ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் தாண்டி, நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுந்தராவ் (நாயுடு) சிலையைச் சுற்றி வந்து, காந்தி இர்வின் பாலம் வழியாக பெரியார் நெடுஞ்சாலை ஈ.வெ.கி. சம்பத் சாலை வழியாக ஊர்வலம் பெரியார் திடல் வந்தடைந்தது. ஊர்வலம் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்தது. இதில் தெலங்கானவைச் சேர்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *