அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்!

0 Min Read

தமிழ்நாடு வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் அவர்களின் தாயார் ஆர்.அமராவதி (வயது 94) அம்மையார் விருதுநகரில் நேற்றிரவு (21.12.2023) மறை வுற்றார். மறைவுச் செய்தியை அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இன்று (22.12.2023) காலை அமைச்சரோடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.

தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, மாவட்டச் செயலாளர் ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் அம்மையாரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

இன்று மாலை இறுதி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *