பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா?

viduthalai
1 Min Read

த.மு.எ.க.ச. கண்டனம்

சேலம், டிச.20- பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்து வரும் முயற் சிக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர்கள் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழி யல் துறை இணைப் பேராசிரியர் ரா.சுப்பிரமணி, ‘பெரியாரின் போர்க் களங்கள்’, ‘மெக்காலே பழைமை வாதக் கல்வியின் பகைவன்’ ஆகிய நூல்களை, சேலம் புத்தகத் திரு விழாவில் வெளியிட்டார்.
இதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலை ஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரகுபதி, அழகப்பன், கல்யாணசுந் தரம் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து மனு அளித்து, பல்கலைக்கழக நிர்வாகத் தின் இந்த செயல் முறையற்றது என்று எடுத்துரைத்தனர்.

அப்போது, நிர்வாகத்திடம் அனுமதி பெறா மல் பேராசிரியரின் இந்த செயலானது பல்க லைக்கழக சட்ட விதிமீறலாக கருதி நடவ டிக்கை மேற்கொள்வதாக துணை வேந்தர் கூறினார். மேலும், பல் கலைக்கழக சிண்டிகேட் உறுப்பின ராக உயர் பதவியில் ரா.சுப்பிரமணி நியமிக்கப்பட்ட பின்னணியில், அவரின் இச்செயல் குறித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்த விவாதம் நடை பெறுவதாகக் கூறினார். இதழியல் துறை பேராசிரியராக இருப்ப வர் நூல் வெளியிட்டுள்ள செயல் எந்த வகையிலும் தவறான செயலாக கருத முடியாது. எனவே, பல்கலைக் கழக நிர்வாகத்தின் மேல் நடவடிக் கையை கைவிட வேண்டுமென த.மு.எ.க.ச. தரப்பில் எடுத்துரைக்கப் பட்டது. அப் போது துணைவேந்தர் பேசுகையில், பெரியார் மற்றும் மெக்காலே குறித்த நூல் வெளி யிட் டதற்காக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும், நிர் வாகம் சட்டப்பூர்வ நடவடிக் கையைதான் மேற்கொள்கிறது என்றும் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *