தேனி மாவட்டத்தில் பெரியார் நினைவு நாள் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

viduthalai
1 Min Read

பெரியகுளம், டிச. 20- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.12.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு பெரிய குளம் வடகரை, பொருளாளர் முருகன் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மருத்துவர் இளங் கோவன் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மோகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி வர வேற்புரையாற்றினார்.
தேனி மாவட்ட அமைப்பாளர் கருப்பண்ணன், ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி, நகர துணைச் செயலா ளர் எழுத்தாளர் இர. அறிவழகன், என். காமராஜ், கந்தசாமி, சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அனைவ ரது உரைகளுக்குப்பின் கீழ் கண்ட தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித் துக் கொள்வதெனவும், வரும் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளினை யொட்டி பெரியகுளம் முக்கிய சாலை சந்திப்பில் பெரியார் படத்துடன் பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்து வது எனவும், பள்ளி மாணவ மாணவி களுக்கு பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் அனுமதியுடன் பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்:
தேனி ஒன்றிய செயலாளர்
சி.துரைபாண்டி
நகர துணைச்செயலாளர் எழுத்தாளர்
இர.அறிவழகன்
இறுதியில் பொருளாளர் ச.முருகன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *