சோமரசன்பேட்டையில் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

சோளீரசன்பேட்டை, டிச. 20- 17.12.2023 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அல்லித்துறை சிவன் கோவில் தெருவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் சு. இராஜசேகர் இல்லத்தில் ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தியான் தலை மையிலும், திருச்சி மாநகர தலைவர் ச.துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர் சி.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
தோழர்கள் கருத்துரைக்கு பிறகு, கூட்டத்தில், தந்தை பெரியார் அவர் களின் 50ஆவது நினைவு நாளை முன் னிட்டு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது என்றும், மணிகண்டம் ஒன்றியம் சோமு அர சன்பேட் டையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தியான், மாநகரகழக தலைவர் ச.துரைசாமி, ஒன்றிய கழக. செபலாளர் சி.திருஞான சம்பந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.இராஜசேகர், இளை ஞரணி செயலாளர் சு.மகாமணி, மாண வர் கழகம் க.கோகுல்ராஜ், ம.சங்கிலி, பா.சேகர், சு. சங்கர். கூட்ட முடிவில்
சு. மகாமணி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *