திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம்

1 Min Read

அகில இந்திய ஓபிசி மாணவர்கள் அமைப்பின் சார்பில் அதன் அகில இந்திய செயலாளர் சாய்கிரண், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை 18.12.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சந்தித்து, வருகிற சனவரி 2024இல் அய்தராபாத் பல்கலைக்கழக ஓபிசி மாணவர்கள் சார்பில் நடைபெற உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கில் இணையம் வழியே கலந்து கொண்டு உரையாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதத்தை நேரில் அளித்தார். அப்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர்கவிஞர்
கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *