புதுடில்லி,டிச.19- நாடாளுமன்ற தேர்த லுக்கு வியூகம் வகுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி 21-ஆம் தேதி கூடுகிறது. ராகுல் காந்தி மீண்டும் நடைப் பயணம் செல்வது பற்றியும் அக் கூட்டத்தில் ஆலோ சனை நடத்தப் படுகிறது.
தேர்தல் வியூகம்
காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக் கும் உயரிய அமைப்பு காரிய கமிட்டி. அதன் கூட்டம், வருகிற 21ஆம் தேதி நடக்கிறது.
டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலை மையகத்தில் கூட்டம் நடக்கிறது. கட்சித் தலை வர் மல்லி கார்ஜுன கார்கே தலைமை தாங்கு கிறார். மேனாள் தலை வர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள் ளிட் டோர் கலந்துகொள் வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தல் நடக்கிறது அதை சந்திப் பதற்கான வியூகம் வகுப் பது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் படுகிறது. தொகுதி பங்கீடு, பா.ஜனதாவை எதிர் கொள்வதற்கான தேர்தல் பிரச்சாரத்துக்கு திட்டம் வகுப்பது ஆகி யவை பற்றியும் விவாதிக் கப்படுகிறது.
மீண்டும் நடைப்பயணம்
ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற் கொண்டார். அது, தெற் கில் இருந்து வடக்கு வரை நடந்த நடைப் பயணமாகும்.
அது போல், கிழக்கில் இருந்து மேற்கு வரை ஒரு நடைப்பயணம் நடத்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைப் பயணம் நடத்தப் படலாம். வேலையில் லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகி யவைதான் முழக்கங் களாக இருக்கும். நடைப் பயணம், வாகனப் பயணம் என இரண்டும் கலந்ததாக பயணம் இருக்கும். பயணம் செல் வதற்கான வாய்ப்புகள் குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக் கப்படும் என்று தெரி கிறது. இதுபற்றிய இறுதி முடிவு விரைவில் எடுக் கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து…
சமீபத்தில் நடத்த 5 மாநில சட்டமன்ற தேர் தல்களில், ஹிந்தி பேசும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம். சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் காங் கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தெலங்கா னாவில் மட்டுமே ஆட் சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடி வுகள் பற்றியும் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. தோல்விக்கான கார ணங்களை ஆராய்வ துடன், நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்னேறி செல்வது பற்றி விவாதிக் கப்படுகிறது.
காங்கிரஸ் உள் ளிட்ட 26 எதிர்க்கட்சி கள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் நான்கா வது கூட்டம் இன்று (19.12.2023) டில்லியில் நடக்கிறது. அதில், கூட் டணியில் தொகுதி பங்கீடு, கூட்டு பிரச்சாரம் ஆகியவை பற்றி பேசப் படுகிறது.
அதைத் தொடர்ந்து, 2 நாள்கள் கழித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக் கிறது.