தருமபுரியில் டிஆர்டிஓ கிளை வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச. 18- தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கிளையை அமைக்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

மக்களவையின் விதி 377இ-ன் கீழ் இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந் தில்குமார் 14.12.2023 அன்று மக் களவை யில் பேசியது:
“தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 2010ஆ-ம் ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மய்யம் அமைக்க எடுத்த முயற்சி குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த பணிக்காக, தருமபுரி மாவட்டம் நெக்குந்தி கிராமத்தில் உள்ள நிலத்தை மாநில அரசும், மாவட்ட நிர்வாக மும் அடையாளம் கண்டு பரிந் துரை செய்யபட்டது. டிஆர்டிஓ நிறுவன அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இருப்பினும், டிஆர்டிஓவின ரால் முன்மொழியப்பட்ட இத்திட் டம் இன்னும் தொடங்கப்பட வில்லை. தருமபுரி தொழில்துறை யில் பின்தங்கிய பகுதியாக இருப்ப தால், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாவட்டத்தை தொழில் வளம் மிக்க பகுதியாக மாற்ற உதவும். இந்த டிஆர்டிஒ ஆராய்ச்சி மய்யம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும்

மேக் இன் இந்தியா முயற்சிக்கு உந்துதலாக செயல்படும் என மதிப்பிடப்பட் டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத் தின் மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மய்யத்தைத் தொடங்கவும், முன் மொழியப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான பணி களை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதற்கான உத்தரவை, டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்” என்று அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *