ராசிபுரம், டிச. 18 – ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 47). சலவை தொழிலா ளியான இவருக்கு சாவித்ரி (வயது 45) என்ற மனைவியும், ஞானப்பிரியா (வயது15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஞானப்பிரியா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில் 15.12.2023 அன்று அரையாண்டு தேர்வெழுதி விட்டு வீட்டு வந்த அவர் தாயின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் சடல மாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்த வெண்ணந் தூர் காவல்துறையினர் மாணவி யின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஞானப்பிரியா நீட் தேர்வில் பங்கேற்பதற்காக பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் சேரவுள்ளதாக தந்தை பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான சிறப்பு வகுப்பிலும் சேர்ந்துள்ளார்.
வகுப்பில் படிக்கும் பாடத்துக் கும், நீட் தேர்விற்கான படிப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதா கவும், தனக்கு எதுவுமே புரிய வில்லை எனவும் பெற்றோரிடம் கூறி புலம்பியுள்ளார். மேலும், ஆங்கிலம் சரியாக வராததால் மன வேதனையில் இருந்து வந்த ஞானப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதை யடுத்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.