கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. கைதேர்ந்துள்ளது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி டி.ச.18- நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். குறிப்பாக, ‘வளர்ந்த இந்தியா’ என்ற பெயரில் ஒன்றிய அரசு பயணம் நடத்தி வரும் நிலையில், அதை சுட்டிக்காட்டி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில், ‘பண வீக்கம். என்ன மாதிரியான வளர்ந்த இந்தியா இது? கொள்ளை அடிப்பதில் பா. ஜனதா தேர்ச்சி அடைந்து உள்ளது’ என சாடியுள்ளார். மேலும், பால், வெங்காயம், தக்காளி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் 2014-ஆம் ஆண்டு விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டு வெளியாகி இருக்கும் காட்சிப்பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *