காவி பெயிண்ட் பூசினால்தான் ஒன்றிய அரசு நிதி தருமோ? மம்தாவின் சாட்டையடி கேள்வி

viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.18 பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கு வங்க மாநி லத்தில் பல்வேறு மக்கள் நல திட்டத்துக்கு தேவை யான நிதியை நிறுத்தி யுள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா குற்றம் சாட்டியுள் ளார். ‘இண்டியா’ கூட்ட ணியின் கூட்டம் மற்றும் பிரதமர் மோடியை சந்திக் கும் வகையில் தற்போது அவர் டில்லி வந்துள்ளார்.

“டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள “இண் டியா” கூட்டணி கூட்டத் தில் நான் பங்கேற்கிறேன். தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடியை எங்கள் கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் சந்திக்க உள்ளேன். ஒன் றிய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதை விடுவிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பல்வேறு மக்கள் நல திட் டங்களுக்கான நிதி இதில் அடங்கும். முக்கியமாக ஒன்றிய அரசின் திட்டங் களுக்கான நிதி கூட வழங்கப்படாமல் உள் ளது. இதற்கான நிதியை மாநில மற்றும் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள் கின்றன. எங்கள் மாநிலத் தில் இருந்து ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகள் தான் எங்களது பங்கு. சுகாதார துறைக்கான நிதி கூட நிறுத்தப்பட்டுள் ளது. ஏனெனில், அதற்கு நாங்கள் காவி நிறத்தை பூச வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். மெட்ரோ நிலையங்களில் இதை செய்துள்ளனர். சிலிகுரியில் சில வீடு களுக்கு காவி நிறம் பூசப் பட்டுள்ளது. அதையே சுகாதார மய்ய கட்டடங் களுக்கும் செய்ய விரும் புகிறார்கள். நாங்கள் ஏன் அதை செய்ய வேண்டும். வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு வண்ணங் களை அரசின் வண்ண மாக மாநிலம் கொண்டுள் ளது. இது எங்கள் கட்சி யின் நிறம் அல்ல. அனைத்து இடங்களிலும் பாஜகவின் சின்னத்தை இடம்பெற செய்வது மற் றும் காவி நிறம் பூசுவது நியாயமான செயலா. திட்டம் சார்ந்த நெறி முறைகளை தங்கள் விருப் பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறார் கள். இப்படியாக பல விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் நாங்கள் பேச உள்ளோம்” என மம்தா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *