புதுடில்லி, டிச. 18 தெற்கு மும்பையில் நடைபெற்ற ‘பன்சாரி சேத் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் பங் கேற்று உரையாற்றினார். அப்போது, நாட்டின் நிகழ்ச்சிப் போக்குகளில் இந்த ஆண்டு தனக்குக் கவலை யளித்த விஷயங்கள் குறித்து பாலி நாரிமன் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“இந்த நாட்டில் சமீப காலங் களில் நடந்த (‘பிபிசி இந்தியா’ அலுவலகங்கள் மீதான சோதனை, தேர்தல் ஆணையர் நியமன மசோதா, ஆளுநர்களின் தன்னிச் சைப் போக்கு, அரசமைப்புப் பிரிவு 370 தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு’ போன்ற) நிகழ்வுகள் மிகவும் கவலை யளிக்கின்றன.
கூட்டாட்சிக்கு எதிரான தீர்ப்பு
குறிப்பாக, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-இன் செல்லுபடி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குழப்பத்தை அளிக் கிறது. இந்த தீர்ப்பு கூட்டாட்சியின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த தீர்ப்பில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனி யன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தரு ணத்தை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. ஏனெ னில், அந்த சமயத் தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலும், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவ தற்கான நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படாமல் தீர்ப்பு வழங் கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
யூனியன் பிரதேசமாக்கிய சூழ்ச்சி
ஜம்மு – காஷ்மீரில் அய்ந்து ஆண்டுகளாக ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் அரசமைப்பு இயந்திரத்தின் முறிவு பற்றி அரசமைப்பின் 356-ஆவது பிரிவின் கீழ் உள்ள விதிகள் பேசுகின்றன. இந்த விதிகளின்படி, தேசிய அவ சர நிலை பிறப்பிக்கப்படாதவரை, மாநிலத்தில் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறாதவரை, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க முடியாது. அரசமைப்பு பிரிவு 356(5)-இல் இதற்கான நிபந் தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜம்மு – காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவ தன் மூலம் இந்த நிபந் தனையை ஒன்றிய அரசு சூழ்ச்சிகரமான முறையில் கடந்து சென்றுள்ளது.
2024 மே மாத வாக்கில், மாநிலத் தகுதி மீண்டும் வழங்குவோம் என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருக்கிறார். அவ் வாறு உறுதியளிப் பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனென் றால், மாநிலத் தகுதி வழங்குவது, நாடாளு மன் றம் சட்டமியற்ற வேண்டிய விஷய மாகும். எனவே, நாடாளுமன்றத்தை தனது வாக் குறுதியில் பிணைக்க அவருக்கு அதிகாரம் இல்லை.
இந்த தீர்ப்புக்கு எதற்கு 4 ஆண்டுகள்?
அவ்வாறான ஒரு விஷயத்தில், ‘நாங்கள் முடிவு செய்ய மாட்டோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது என்றால், அரசமைப்பு பிரிவு 356(5) கூறும் விதிகளை புறக் கணித்து, அரசியலமைப்புச் சட் டத்திற்கு முரணான செயல்பாடு காலவரையின்றி தொடர உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது என்றே அர்த்தம். இந்த விவகா ரத்தில் இத்தகைய தீர்ப்பை வழங் குவதற்கு ஏன், உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது என்ற கேள்வியும் எழுகிறது.
ஊடகங்களின் கழுத்தை நெரிக்க..
ஊடகங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடக்கும் தருணத்தில், நீதிமன்றங்கள் அவற்றை உடன டியாக தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும். சுதந்திரமான ஊடக அறிக்கைக்காக மட்டுமே (‘இந்தியா : மோடி என்ற கேள்வி’ ஆவணப்படத்திற்காக பிபிசி மீது) வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுமானால், அது சட்ட விரோத மானது; அரசமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன் றங்கள் கூற வேண்டும். ஊடகத் தையும் இந்த நாட்டையும் நீங்கள் பாதுகாக்கும் ஒரே வழி இதுதான். இந்த நாட்டின் கண்காணிப்பு பொறி முறையாக ஊடகங்கள் இருக்கின் றன. அவ்வாறான ஊட கங்களையும் கழுத்தை நெரித்து கொல்வதற்கு அனுமதி அளித்தோமானால், இங்கே எதுவும் எஞ்சியிருக்காது.
‘தேர்தல் ஆணையர் நியமன மசோதா’
நாடாளுமன்றம் சட்டமியற் றும் வரை, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க் கட்சித் தலை வர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்ட நிலையில், மிகவும் கெட்ட வாய்ப்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சர் மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் ஷரத் துக்களுடன் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா, 2023, டிசம்பர் 12 அன்று மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டுள் ளது. ஒருவேளை இது சட்டமா னால், இந்த முறையில்தான், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்களை நியமிக்கப் போகிறார்கள் என்றால், அந்த சட்டத் திருத்தத்தால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கடுமை யாக பாதிக்கப்படும். அதை நீக்க வில்லை என்றால், அது ஜன நாயகத் துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும். எனவே, உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்திருத்தத் தைத் தன்னிச்சையானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.
கேரளத்தின், சட்டப்பேரவை யில் நிறை வேற்றப்பட்ட மசோ தாக்களை, 23 மாதங்களாக, முடி வெடுக்காமல் ஆளுநர் முடக்கி வைக்கிறார். கடைசியில், உச்ச நீதி மன்றம் தலையிட்ட பிறகு எட்டு மசோதாக்களில், ஏழு மசோதாக் களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். ஒரே ஒரு மசோதா வுக்கு மட்டும் ஒப்புதல் கிடைத்தது. இது ஒரு மிகவும் கவலைக்குரிய விஷயம். அனைத்து மசோதாக்களையும் ஆளுநர்கள், குடியரசுத் தலை வரிடம் அனுப்பி விட்டால், சட் டப் பேரவைகளின் சட்டம் இயற்றும் அதிகாரமே முடங்கிவிடும்.
மசோதாக்களை மரணிக்கச் செய்யும் ஏற்பாடு
ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவது போல் அல்ல, குடியரசுத் தலை வருக்கு அனுப்பு வது. திரும்பிய மசோதா சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப் பட்டால், அதை ஆளுநர் ஏற்றுத் தான் ஆக வேண்டும். ஆனால் இங்கு மசோதாக்கள் ஒட்டுமொத்தமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படுகின்றன. இதன் மூலம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக் கள் ஒன்றிய அர சின் வாசலைச் சென் றடைகின்றன. மசோதாக்களுக்கு ஒப் புதல் அளிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தால், அந்த மசோதாக்கள் மரணித் துப் போனது போல் ஆகிவிடுகிறது. கேரள சட் டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவ ரின் பரிசீல னைக்கு அனுப்பிய கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானின் செயல், அரசமைப்புப் பிரச்சினையை ஏற்படுத்தும் நட வடிக்கை.
இவ்வாறு ரோஹிண்டன் பாலிதாரியமன் பேசியுள்ளார்.