தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

2 Min Read

சென்னை, டிச. 18- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிக ரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழ்நாடு முழு வதும் வாரம்தோறும் சனிக் கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற் றுள்ளனர். இந்நிலையில், 8ஆ-வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங் களில் 16.12.2023 அன்று முகாம் கள் நடைபெற்றன. சென்னை அடையாறு மண்டலம், வேளச் சேரி 100 அடிசாலை, சசி நகரில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மழைக்கால மருத்துவ முகாம் களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை உள்ளசிறார்களுக்கு தட் டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியும் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னை, செங்கல் பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள் ளப் பாதிப்பு உள்ளான பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
பிளீச்சிங் பவுடர்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைத் தளத்தில் உள்ளகுடிநீர் தொட்டி களை பிளிச்சிங்பவுடர் பயன் படுத்தி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக, சென்னை மாநக ராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்குள்ளான 4 மாவட் டங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும் பத்துக்கும் அரை கிலோ பிளீச்சிங் பவுடர் கொடுக்கப்படுகிறது.

கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிக் கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகி விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

கடந்த 4 மாதங்களாக குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய் யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *