கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறும்படம் வெளியீடு

1 Min Read

சென்னை, டிச. 18- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, அமைச்சர் கணேசன் 16.12.2023 அன்று வெளியிட்டார்.
கொத்தடிமை தொழிலாளர் முறையை, 2030ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற, தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்க, 4 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. தொழிலாளர் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தை, அமைச்சர் கணேசன் நேற்று முன்தினம் (16.12.2023) வெளியிட்டார்.
தொழிலாளர் நலத்துறையில், பணியின் போது இறந்த ஆறு பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஹேமலதா பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *