சென்னை, டிச. 18- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, அமைச்சர் கணேசன் 16.12.2023 அன்று வெளியிட்டார்.
கொத்தடிமை தொழிலாளர் முறையை, 2030ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற, தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்க, 4 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. தொழிலாளர் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தை, அமைச்சர் கணேசன் நேற்று முன்தினம் (16.12.2023) வெளியிட்டார்.
தொழிலாளர் நலத்துறையில், பணியின் போது இறந்த ஆறு பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஹேமலதா பங்கேற்றனர்.
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறும்படம் வெளியீடு
Leave a comment