புதுடில்லி,டிச.17- நாடாளு மன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடும் அமளியில் ஈடு பட்டனர்.
நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த 13.12.2023 அன்று நடைபெற்ற அத்துமீறல் சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. அத்துமீறி நாடாளுமன் றத்தில் வண்ண புகை குண்டு களை வீசியவர்கள் மீது தீவிர வாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளி யில் ஈடுபட்ட கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டத்தொடர் முழு வதும் பங்கேற்க தடை விதிக் கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 15.12.2023 அன்று காலை அவை கூடிய தும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர் கள் கடும் அமளியில் ஈடுபட்ட னர். இதனால், அவை நடவடிக் கைகள் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நாடா ளுமன்ற இரு அவைகளும் நாளை 18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப் பட்டு உள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை 18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
Leave a comment