நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை 18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

1 Min Read

புதுடில்லி,டிச.17- நாடாளு மன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடும் அமளியில் ஈடு பட்டனர்.
நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த 13.12.2023 அன்று நடைபெற்ற அத்துமீறல் சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. அத்துமீறி நாடாளுமன் றத்தில் வண்ண புகை குண்டு களை வீசியவர்கள் மீது தீவிர வாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளி யில் ஈடுபட்ட கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டத்தொடர் முழு வதும் பங்கேற்க தடை விதிக் கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 15.12.2023 அன்று காலை அவை கூடிய தும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர் கள் கடும் அமளியில் ஈடுபட்ட னர். இதனால், அவை நடவடிக் கைகள் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நாடா ளுமன்ற இரு அவைகளும் நாளை 18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப் பட்டு உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *