மனிதாபிமான செயல் வெள்ளத்தில் சிக்கிய 92 கர்ப்பிணிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய காவல்துறையினர்

viduthalai
3 Min Read

சென்னை, டி.ச.17- சமீபத்தில் சென்னையை கலங்க வைத்த மழை வெள்ளத்தில் 92 கர்ப்பிணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை மருத் துவமனையில் சேர்த்து காவல் துறையினர் ஓசை இல்லாமல் உதவி செய்துள்ளனர்.
சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளம் மக்களை திக்குமுக்காட வைத்தது. காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத் தோரும் வெள்ளத்தில் காவல்துறை படைகளோடு படகில் சென்று உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்களை வழங் கினார்.
நிறைமாத கர்ப்பிணிகள், புற்று நோய் போன்ற கொடிய நோய் களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நோயாளிகள், தாங்கி பிடிக்க ஆள் இல்லாமல் தவித்த முதியோர் கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் போன்றவர்களுக்கு காவல் துறையினர் நீட்டிய உதவிக் கரம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது.

92 கர்ப்பிணிகள்
கடந்த 4-ஆம் தேதி அன்று பலத்த காற்றோடு பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. 108 ஆம்புலன்சு வசதி செயலிழந்து போனது. இந்த நேரத்திலும் துணிச்சலோடு தங்கள் வாகனத் தில் வெள்ளத்தில் சென்று சென்னை நகரின் பல்வேறு பகுதி களில் வீட்டில் தவித்தப்படி இருந்த 92 கர்ப்பிணிகளை காவல் துறை யினர் மீட்டனர்.
அவர்களை உரிய மருத்துவ மனையில் சேர்த்தனர். இதில் பல கர்ப்பிணிகள் சுகப் பிரசவத்தில் அழகான குழந்தைகளை பெற்றெ டுத்துள்ளனர்.
வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த சுவேதா (வயது 24) பெண் குழந்தை பெற்றார். கொளத் தூரை சேர்ந்த ஜெயசிறீ, புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார மய்யத்துக்குள் வெள்ளம் புகுந்த தால் அங்கு சிக்கிய 4 கர்ப்பிணிகள், துரைப்பாக்கம்,கோயம்பேடு, நீலாங்கரை உள்படபலஇடங்களில் பரிதவித்த கர்ப்பிணிகள் 92 கர்ப் பிணிகளை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்து காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

நோயாளிகள்
புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நோயாளிகள், மூத்த குடிமக்கள் என 1247 பேரை காவல்துறையினர் பத்திரமாக மீட் டுள்ளனர் மீட்கப்பட்ட நோயாளி களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூத்த குடிமக்கள் முகாம்களில் தங்க வைத்து அவர் களுக்கு உணவு பொருட்களை வழங்கி உள்ளனர். மழை வெள்ள நேரத்தில் சென்னை போலீஸ் கட் டுப்பாட்டு அறைக்கு 1.739 அழைப் புகள் வந்துள்ளதாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்தமாக சென்னை காவல்துறையினரால் உதவிக்கரம் நீட்டப்பட்டு 18 ஆயிரத்து 264 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவிலியர் உதவியோடு கர்ப்பிணியை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்
வில்லிவாக்கம் அகத்தியர் தெருவை சேர்ந்த கர்ப்பிணி சுவேதா. 4-ஆம் தேதி பிரசவ வலி யால் துடித்தார். அவர் அயனா வரம் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை சீரியசாக உள்ளதால் உடனடியாக அவரை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்க வேண் டும் என்று மருத்துவர்கள் கூறி னார்கள். ஆனால் அன்றைய 108. ஆம்புலன்சு சேவை முடங்கி இருந் தது. இதுபற்றி அறிந்த அயனாவரம் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பரணிநாதன், செவிலியர் வாழ்வரசி உதவியோடு சுவேதாவை தனது ஜீப்பில் ஏற்றி எழும்பூர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.
வழியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. மாற்றுப்பாதையில் சென்றால் நேரமாகும். அத்துடன் சுவேதாவும் பிரசவ வலியால் துடித்ததால் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் சுவேதா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தால் தாயும், சேயும் காப்பாற்றப்பட் டார்கள் காவல் ஆய்வாளர் பரணி நாதனை காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்பட காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *