சிறார்-மகளிர் இல்லங்கள், விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

1 Min Read

கள்ளக்குறிச்சி டிச.17- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகளை உடனடியாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். மேலும் ஒரு உள்ளூரையோர் தங்குவதற்கு சராசரியாக சிறார்களுக்கு 40 சதுர அடி மற்றும் மகளிர்க்கு 120 சதுர அடி இடத்தை ஒதுக்கீடு செய்வதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். குளியல் மற்றும் உடை மாற்றும் அறையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் பெண்ணாகவும் விடுதி பாதுகாவலர் ஆணாகவும் இருக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர் காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு மற்றும் விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *