பன்னாட்டு போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாடு

1 Min Read

சென்னை, டிச.17- இந்திய ஆட்டோ வாகன பொறி யாளர்கள் கழகம் மற்றும் மின்சாரம், மின்னணு பொறி யாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் பன்னாட்டு போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாட்டை நடத்தின.
இந்தியாவில் வாகன பொறியியல் வல்லுநர் களிடையே, சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்த துறையில் சமீபத்திய மாற்றங்கள் குறித்து ஒருவருக் கொருவர் விவாதிப் பதற்கான தளமாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
இந்திய வாகன சந்தை வேகமாக வளரும் என எதிர்பார்க்கப் படுவதாலும், தற்போது உலகின் 3ஆவது பெரிய சந்தையாக இருப்பதாலும் இந்த மாநாடு பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தரமான மின்சார வாகனங்களை தயாரித்தல், மின்வாகன தொழில்துறையினருக்கு ஏற்ற அரசின் கொள்கை, இந்தியாவில் கரியமில வாயுவை 2070க்குள் முற்றிலுமாக குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் வல்லுநர்கள் விவாதித்ததாக மாநாட்டின் தலைவர் என் பாலசுப்ரமணியன் கூறினார். வேகமான சார்ஜிங் நிலை யங்கள், மாற்றக்கூடிய பேட்டரி, அதன் எடையைக் குறைத்தல் தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தாக மாநாட்டு அமைப் பாளர் டாக்டர். ஷங்கர் வேணு கோபால் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *