வாரணாசி, டிச.16 “இந்தியா” கூட்டணியின் வட இந்திய முகங்களாக திகழும் நிதிஷ் குமார் மற்றும் அகிலேஷ்யாதவ் வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், சாமியார் முதலமைச்சர் அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தராமல் பல் வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். மேலும் காவல்துறையின ரும் ஒத்துழைப்பு வழங்க மறுத்த நிலையில் கூட் டத்தை வேறு ஒரு தேதி யில் நடத்த முடிவு செய் துள்ளார் நிதிஷ்குமார்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதி ராகவும் எதிர்க்கட்சி களைத் திரட்டி “இந்தியா” கூட்டணியை உருவாக்கி யதில் முக்கியப் பங்கு வகித்தவர் நிதிஷ்குமார். பிரதமரையும், பாஜகவை யும் கடுமையாக விமர் சித்து வரும் நிதிஷ் குமார், மோடியின் வாரணாசி மக்களவைத் தொகுதிக் குள்பட்ட ரோகானியா பகுதியில் டிசம்பர் 24-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அவ ரது அய்க்கிய ஜனதா தளம் சார்பில் அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், இந்த பொதுக் கூட்டம் தள்ளிவைக் கப்பட்டுள்ள தாக அய்க்கிய ஜனதா தளம் சார்பில் தெரிவிக்கப் பட்டது. இது தொடர் பாக பீகார் ஊரக மேம் பாட்டுத் துறை அமைச்சர் சரவண் குமார் கூறுகை யில், ‘வாரணாசியின் ரோ கானியாவில் உள்ள ஜகத் பூர் கல்லூரி நிர்வாகம் பொதுக் கூட்டத்துக்கான இடத்துக்கு அனுமதி மறுத்ததுள்ளது. முதலில் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தது பின்னர் காவல்துறையினர் பாது காப்பு வழங்க தயக்கம் காட்டுவதை காரணம் காட்டி நிகழ்ச்சி நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்தது ஆனால் அப்பகுதி நகர்மன்ற நிர் வாக கல்லூரி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடை பெறு வதால் பொதுக் கூட்டம் நடத்துவது கடினமாக இருக்கும் என்று கல்லூரி முதல்வர் அஜய் சிங்கிடம் கடிதம் வாங்கி உள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அழுத்தத் தால் இவ்வாறு நடத்தப் பட்டது’ என்றார்.
இந்த நிலையில் வார ணாசி தொகுதி என்பது மோடியின் தொகுதி. அங்கு அகிலேஷ் யாத வின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சில சமுகநீதி அமைப்புகளின் ஆதரவு அதிகம் உள்ளது. இந்த நிலையில் நிதீஷ் குமார் அங்கு கூட்டம் நடத்தினால் மக்கள் அதிகம் கூடுவார்கள். எதிர்க்கட்சி ஆதரவாளர் கள் கூடுவதை சாமியார் முதலமைச்சர் அவ்வளவு எளிதில் தடுக்கவோ அவர்களை செல்லவிடா மல் செய்யவோ முடியாது. இந்த நிலையில் கூட்டம் நடத்தும் இடத்தை கொடுத்த கல்லூரி நிர் வாகத்திற்கு நெருக்கடி கொடுத்தால் கூட்டம் நடத்தாமல் போய்விடும் என்ற தந்திரத்தோடு அனைத்து அரசு அதி காரங்களும் வாரணாசி யில் கூட்டம் நடக்க விடாமல் செய்த முயற் சியால் நிதிஷ் குமாரின் வாரணாசிக் கூட்டம் தள்ளிப்போனது. இருப் பினும் விரைவில் வேறு இடத்தில் சிறப்பான ஏற்பாடு செய்து வாரணா சியில் நடத்திக்காட்டு வோம் என்று அய்க்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.