பிஜேபியின் யோக்கியதை இதுதான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி எம்.எல்.ஏ.க்கு 25 ஆண்டு சிறை

2 Min Read

வாரணாசி, டிச.16 உத்தரபிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ஆ-ம் ஆண்டு அப்பகு தியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப் படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவு களில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர்மீது வழக்கு தொடரப்பட் டது.இந்த சம்பவம் நடைபெற்ற போது ராம்துலார் கோண்ட் சட்ட மன்ற உறுப்பினராக இல்லை.

இந்நிலையில் அவர் கடந்த 2022ஆ-ம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பின ராக பொறுப்பேற்று இருப்பதால், இந்த வழக்கு நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன் றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவ டைந்த நிலையில் ராம்துலார் கோண்ட், குற்றவாளி என மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன் றம் அறிவித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தி ருந்தது. இந்நிலையில் நேற்று (15.12.2023) தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2 ஆண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். தண்டனை விவ ரத்தை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்குரைஞர் விகாஸ் ஷாக்யா தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணை நடை பெற்றபோது சட்டமன்ற உறுப் பினர் கோண்ட், எங்கள் குடும்பத் தாருக்கு அதிக தொல்லை கொடுத்து வந்தார். வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவரது ஆட்கள் மிரட்டி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நீதி வென்றுள்ளது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *