உத்தரப்பிரதேசத்தில் ஜோடோ யாத்திரை உதயம்… காங்கிரஸ் கட்சியின் திட்டம்

1 Min Read

புதுடில்லி, டிச.16 ஒற்றுமை நடைப் பயண வரிசையில் அடுத்தக் கட்ட பயணத்தை உத்தரப்பிரதே சத்தில் காங்கிரஸ் கட்சி டிச.20 அன்று தொடங்குகிறது. தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி சிறீநகரில் முடிந்த நடைப் பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சி காணப்பட்டது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் பிம்பம் சீரமைக்கப்பட்டது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என்பதை நிரூபித்தது. கருநாடகா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க உதவியது.

3 வட மாநிலங்களில் தோல்வி அடைந்தபோதும் வாக்கு விகிதத் தில் திடமாக முன்னேறி உள்ளது. குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராக காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் தந்தது. அந்த யாத்திரையின் நிறைவின் போதே, அதே பாணியிலான ஒற்றுமை நடைப் பயணம் நாடு நெடுக நடத்தப்படும் என காங் கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந் தனர். அதன்படி தற்போது உத்த ரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் நடைப் பயணம் டிச.20 அன்று தொடங்குமென அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச நடைப் பயணம் சஹாரன்பூரில் தொடங்கி சீதாபூரில் முடியத் திட்டமிடப்பட் டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராவ் தலைமையில் 16 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட பயணத்தை அடுத்து இதர மக்களவைத் தொகுதிகளை மய்யமாகக் கொண்டு அடுத்தக் கட்ட பயணங்கள் தொடங்க இருக்கின்றன. மக்களவைத் தேர் தலை பொறுத்தளவில் இந்தியாவி லேயே அதிக மக்களவை உறுப் பினர்களை டில்லிக்கு அனுப்பும் மாநிலமாக உ.பி. உள்ளது. 80 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உ.பி.யின் வெற்றி வாய்ப்பே இந்திய அளவிலும் பிரதிபலிக்கும் என்பது வரலாறு. பாஜக வலுவாக காலூன் றியிருக்கும் இத்தகைய உபியில் காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான நிலை மையில் உள்ளது.

எனவே அங்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், மக் களவைத் தேர்தலுக்கு ஆயத்த மாகவும் ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத் துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *