கருநாடக துணை முதலமைச்சரின் வீண்வம்பு மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயாராம்

viduthalai
1 Min Read

பெலகாவி,டிச.16- கருநாடகத்தில் மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார் என்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கருநாடக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 14.12.2023 அன்று மேல்-சபையில் நடை பெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் என். ரவிக்குமார் மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார் அதற்கு நீர்ப்பாசனத்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசியதாவது:-

நமது நீர்,நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட் டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழ்நாட்டுக்கு தான் அதிக நன்மை கிடைக்கும். நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், அதற்கு ஒன்றிய அரசின் சுற் றுச்சூழல்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த அனுமதி இல்லாமல் திட்டத்தை அமல் படுத்த முடியாது. அதனால் ஒன்றிய அரசு இந்ததிட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜனதாவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால் நமக்கு நெருக்கடியான நிலை வராது.
கருநாடகத்தில் இந்த முறை கடும் வறட்சி ஏற்பட்டுள்ள போதி லும் விவசாயிகளின் பயிர்களை காக்க தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளையும் பின்பற்றினோம்.

மேகதாது திட்ட பிரச்சினையை கீழ்மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் கருநாடக அனைத்துக்கட்சி மக்க ளவை உறுப்பினர்களை உள்ள டக்கிய குழுவை டில்லிக்கு அழைத் துச் செல்ல அரசு தயாராக உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *