புதுடில்லி, டிச. 16 – நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்ட நிகழ்வுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரியதற்காக 14 எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜன நாயகத்துக்கு எதிரானது; அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?
பாதுகாப்புக் குளறுபடி குறித்து விவாதம் நடத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவையில் விளக்க மளிக்க வலியுறுத்தியது குற்றமா..? ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா..?
இந்த நடவடிக்கை தற்போதைய காலகட்டத்தின் ஒரு அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான தன் மையை காட்டவில்லையா..?” என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.