விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளப்பதிவில் குறிப் பிடுகையில், “நாடாளுமன்றத்தில் ‘கட்டுப்பாடற்ற நடத்தை’ என் னும் பெயரில் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் உள்துறை அமைச்சர் அது குறித்து அவையில் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி குரல் எழுப் பியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் இந்தப் போக்கை விடுதலை சிறுத் தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடைநீக்கத்தை விலக்கி அனைவரையும் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.