புதுடில்லி,டிச.16- வண்ணப் புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத் துக்குள் எப்படி கொண்டு சென்றனர் என்பது குறித்து காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப்புகைக் குண்டு களை வீசியதாக பிடிக்கப்பட்ட 4 பேரும் நாடாளுமன்ற துணை இயக்குநரால் டில்லி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட் டனர்.
அப்போது இரு ஜோடி காலணிகளும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டன. அவை மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா ஆகியோருடையது. அவைகள் விளையாட்டு வீரர்கள் அணியும் காலணி களாகும்.
இதில் சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் அணிந்திருந்த சாம்பல் நிற காலணிகளின் (இடது காலுக்குரியது) அடிப் பகுதியின் தடிமன் அதிகரிக்கப்பட்டு அதன் உள்ளே சிறிய பொருள் வைக்கும் அளவுக்கு குழிபோன்று அமைக்கப்பட்டு, கனமான ரப்பரால் மூடப்பட்டு இருந்தது. இதற்குள் வண்ணப்புகை குண்டுகளை மறைத்து வைத்துதான், அவர்கள் நாடாளு மன்ற கட்டடத்துக்குள் நுழைந்துள்ளனர். வலது கால் காலணிகளிலும் இதேபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோரிடம் இருந்து பயன்படுத்திய 4 குப்பிகளும், பயன்படுத்தப்படாத ஒரு வண்ண புகைக் குண்டும் கைப்பற்றப் பட்டன. அவர்கள் கொண்டு வந்த வண்ணப் புகைக் குண்டுகளை திறக்கும் போது கண்ணாடி மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்” என்று எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் அந்த வண்ணப் புகை குண்டுகளில் இருந்தன.
இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.