பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஜே.பி.நட்டா கவனிக்கவில்லையா?: சித்தராமையா கேள்வி

viduthalai
4 Min Read

பெங்களூரு, டிச. 16- பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத் திற்காக பயன்படுத்திக் கொள் வது வெட்கக்கேடானது என சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
கருநாடக மாநிலம், பெல காவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒரு வரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய தோடு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ணின் மகனும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மக ளும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இளைஞரின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், அந்த வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, இளைஞரின் 42 வயதான தாயாரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று, மின் கம் பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் ஏற்ப டா மல் தடுக்க, அங்கு கருநாடக மாநில ரிசர்வ் காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே பெலகாவி சம்பவத்திற்கு பா.ஜ.க. உள் ளிட்ட கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்து வருகின்றன. கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதி ரான வன்முறை அதிகரித்துள்ள தாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டி யுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச் சாட்டுக்கு சித்தராமையா பதி லளித்துள்ளார். இது தொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதா வது;
“கருநாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதி ராக பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அதை மறந்துவிட்டு எங்களை அரசியல் ரீதியாக குறிவைத்து விட்டார். தவறான வாய்ப்பாக, சமீபத்தில் பெலகாவியில் நடந்த ஒரு பெண்ணுக்கு எதி ரான வன்முறை சம்பவத்தை அவர் அரசியலுக்கு பயன்படுத் துகிறார்.

பெலகாவியில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது.
பெலகாவி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நமது உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வரா மற் றும் பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் ஆகி யோர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லா மல் இழப்பீடும் வழங்கினர். காவல்துறையினர் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத் தனர்.
இந்த வழக்கின் விசார ணையை நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகி றேன். குற்றவாளிகளுக்கு கடு மையான தண்டனை வழங்கு வதன் மூலம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
மாநில பா.ஜ.க. தலைவர் களும் மாநில அரசின் நடவடிக் கைகளால் திருப்தி அடைந்து உள்ளனர். இருப்பினும், நட்டாவின் திடீர் விழிப்பும், சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கைக் கிளற அவர் முயற்சித்ததும் பெண்கள் மீதான உண்மையான அக்கறை யைக் காட்டிலும், அரசியல் உள்நோக்கத்தையே குறிக்கிறது.

நட்டா பெண்களின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை பாதுகாக்கத் தவறிய முந்தைய பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்திருப்பார். தேசிய குற்றப் பிரிவு (NCRB) அறிக்கையின் படி, கருநாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஆண்டு (2022) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர் பாக 17,813 வழக்குகள் பதிவாகி யுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் (2021) 14,468 வழக்குகள் பதிவாகியுள்ளன. அப்போது பா.ஜ.க. தேசிய தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இவர்களது ஆட்சியில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் அதிகரித்து வருவதை அவர் கவனிக்கவில்லையா?
மணிப்பூர் முதல் குஜராத் வரை, உத்தரப் பிரதேசம் முதல் மத்திய பிரதேசம் வரை, பா.ஜ.க. எங்கு ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதி கரித்து வருவதாக என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது. பா.ஜ.க. இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதை இந்த வழக்குகள் நிரூபிக்கின்றன.

மாநில பா.ஜ.க.விற்குள் உள்ள உட்கட்சி பூசல்கள் அக்கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகை யில் அதிகரித்து வருகின்றன. கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கட்சியின் மூத்த தலைவர் கள் கடுமையான குற்றச்சாட் டுகளை முன்வைத்து வருகின்ற னர். நட்டாவுக்கு தைரியமும் அதிகாரமும் இருந்தால், இந் தக் குற்றச்சாட்டுகளை விசா ரிக்க விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும்.”
-இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *