பைசாபாத், டிச.16 அயோத் தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலி ருந்து இமாம் வருகிறார். அயோத் தியிலிருந்து 25 கி.மீ. தொலைவி லுள்ள தானிபூர் என்ற இடத்தில், அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க முஸ்லிம்களுக்கு உத்த ரப் பிரதேச அரசு வழங்கிய இடத் தில் புதிய மசூதி கட்டப்படவுள்ளது.
இந்த மசூதி இந்தியாவிலேயே பெரியதொன்றாக அமையும் என்றும் 5 மினார்கள், இஸ்லா மிய மார்க்கத்தின் 5 தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளன என்றும் மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவரும் மசூதி மேம் பாட்டுக் குழுவின் தலைவருமான ஹாஜி அராஃபத் ஷேக் தெரிவித்துள்ளார். தாஜ்மஹாலை விட மிளிரக் கூடியதாக இந்த மசூதி இருக்கும். மேலும், மசூதி யுடன் புற்றுநோய் மருத்துவ மனை, பள்ளி, கல்லூரி, அருங் காட்சியகம், நூலகம் மற்றும் முழுமையான சைவ உணவகம் ஆகியவை அமைக்கப்படவுள் ளன என அவர் தெரிவித்துள் ளார் அடிக்கல் நாட்டும் விழா வின்போது, மசூதியின் வடிவ மைப்பும் வெளியிடப்படவுள் ளது. எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கடல் உயிரினக் காட்சியகம் இங்கு அமையவுள் ளது. வழிபாட்டுக்காக மட்டுமில் லாமல் அனைத்து மதத்தையும் சேர்ந்த மக்கள் இங்கு அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைத் தேடி வரலாம் என ஷேக் தெரிவித்துள்ளார்
அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்ட சவுதி அரேபியாவில் இருந்துவரும் மதகுரு
Leave a Comment