தொட்டிலை ஆட்டும் கை தொல் உலகை ஆளும் கை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்: இஸ்ரோ தலைவர்

Viduthalai
1 Min Read

அரசியல்

திருவனந்தபுரம், அக். 23-  இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று (22.10.2023) கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பும் ககன் யான் திட்டத்தில் பெண் களும் பங்கேற்க வேண் டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். அடுத்த ஆண்டு அனுப்பப்பட வுள்ள ஆளில்லா ககன் யான் விண்கலத்தில் பெண் உருவம் – மனிதனைப் போன்ற ஒரு ரோபோ அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.

மனிதர்களை பூமியி லிருந்து 400 கி.மீ. சுற்று வட்டப்பாதைக்கு விண் ணுக்கு அனுப்பி 3 நாட் கள் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு பின்பு அவர்களை பூமிக்கு பத் திரமாக அழைத்துவரு வது ககன்யான் திட்டத் தின் நோக்கம். இந்த திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகர மாக நிறைவடைந்துள் ளது. ககன்யான் திட்டம் 2025-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த பணி மிக குறுகிய காலத்தில் நிறை வேற்றப் படவுள்ளது என்று சோம் நாத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *