இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

viduthalai
1 Min Read

சென்னை,டிச.15- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதி யுள்ள கடிதத்தில் வலியுறுத்தி யுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் 13.-12.-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய் சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14.-12.-2023) கடிதம் எழுதி யுள்ளார்.

அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், மிழிஞி-ஜிழி-08-விவி-26 என்ற பதிவு எண் கொண்ட இயந் திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றி ருந்த நிலையில், அவர்களது மீன் பிடிப் படகுடன் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரு மளவில் பாதிக்கப்படுவதுடன், மீன வர்களின் வாழ்வில் பெருத்த அச் சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவ தாகத் தெரிவித்துள்ள முதலமைச் சர், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவ லில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடி யாகத் தலையிட்டு, இலங்கைவச முள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு முதலமைச்சர் தனது கடிதத் தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *