தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசின் துணை அமைப்பாக மாற்றுவதா?

viduthalai
2 Min Read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி

புதுடில்லி, டிச.15 தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர் பான திருத்தச் சட்டமுன்வடிவு மீது மாநிலங் களவையில் கடந்த 12 ஆம் தேதியன்று நடை பெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரை வருமாறு:
இப்போது தேர்தல் நடத்துவதில் இரு தூண் கள் மிக முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று, பண பலம், மற்றொன்று புஜபலம். இதனை ஒழித்துக்கட்ட இந்தச் சட்டமுன் வடிவில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை சரி செய்திடும் விதத்தில் ஏதேனும் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவந்திருந்தால் நான் அரசாங்கத்தைப் பாராட்டி இருப்பேன். ஆனால், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்டால், நாம் தேர்தல் ஆணையம் இருக்கும் ‘நிர்வாசன் சதன்’ என்னும் இடத்தை மூடி விடலாம். அமைச்சரின் அவுட்ஹவுசில் தேர் தல் ஆணையர்களைத் தங்க வைத்துக் கொள் ளலாம்.
ஏன் நாம் தேர்தல் ஆணையத்திற்காக நேரத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணடிக்க வேண்டும்? அது தேவை இல்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல் படாவிட்டால், அது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதன் பொருள் என்ன? இந்தச் சட்டமுன் வடிவானது பேரழிவு தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்திடும். ஏனெனில் இந்த அரசாங்கம், தேர்தல் ஆணையம் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ், தன்னைச் சார்ந்திருக்கும் விதத்தில் மாற்றி யமைக்கிறது. அதாவது, அரசின் ஓர் துணை அமைப்பாக மாற்றப்படுகிறது. உண்மையில் இதுதான் இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு விட்டால், பின், அமைச்சரின் தெரிவுக்குழுதான் தேர்தல் ஆணையத்திற்குத் தலைமை வகித் திடும். அமைச்சரின் தெரிவுக்குழு 5 அல்லது 6 நபர்களைத் தீர்மானித்தாலும், தெரிவுக்குழு வெளியிலிருந்தும் சிலரை எடுத்துக்கொள்ள முடியும்.
அடுத்து, தேர்தல் பத்திரங்கள் மற்றொரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும். இப்பிரச் சினை இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் இருப்பதால் அதற்குள் நான் செல்ல வில்லை.

இது தொடர்பாக, மேனாள் நிதிச் செய லாளர் சுபாஷ் சந்திரா கார்க் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்: “ஏன் வர்த்தக நிறுவனங்கள் தேர்தல் நன்கொடை பத்திரங் கள் அளித்திட வேண்டும்? ஏனெனில், அதன்மூலம் அரசிடமிருந்து சில சலுகை களைப் பெற முடியும், தங்கள் வணிக லாப நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதால்தான் அவர்கள் நன்கொடை அளிக்கிறார்கள்.” தேர்தல் பத்திரம் அளிக்கும் முறை ஜனநாயக விரோதமானது, ஊழலை சட்டப்பூர்வமாக்குகிறது. தேர்தலில் பண பலத்தையும், புஜ பலத்தையும் எப்படிக் கட்டுப் படுத்தப் போகிறோம்? 2019 மக்களவைத் தேர் தலின்போது செலவழிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, 1998 மக்களவைத் தேர்தலின்போது செலவு செய்யப்பட்டதைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அந்த சமயத்தில் 9,000 கோடி ரூபாயாக இருந்த செலவு, 2019 இல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இதில் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்த கட்சி பியூஷ் கோயலின் கட்சி (பாஜக) ஆகும். இப்போது 2024இல் இது இதைவிட இரண்டு மடங்காகப் போகிறது. நேர்மை யானவராக இருந்த தேர்தல் ஆணையர் அந்தப் பதவியிலிருந்து ஏன் அகற்றப்பட்டார்? அவர் வீட்டிலும், அவருடைய மனைவி மற்றும் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் மேற்கொண்டிருக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *