விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்: மோடிமீது காங்கிரசு சாடல்

1 Min Read

புதுடில்லி, டிச. 15- கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தர வாதம், பணவீக்கத்துக் கான உத்தரவாதம் தான் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத் தில், “இப்போதெல்லாம், பிரதமர் மோடியின் உத் தரவாதங்கள் பற்றி பா. ஜனதா பேசி வருகிறது. அவர்களின் மற்ற உத்தர வாதங்கள் பற்றி தெரி யாது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தரவா தம், பணவீக்கத்துக்கான உத்தரவாதம் ஆகும். இந்த அரசின் தவறான கொள்கைகளால், பண வீக்கம் ஏற்கெனவே 45 ஆண்டுகால சாதனையை முறியடித்து விட்டது.
அத்தியாவசிய பொருட் களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பொருட்களின் விலை உயர்வால், சில் லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி முற்றி லும் தவறி விட்டார்.
இந்த தோல்வியை மறைக்கவே அவர்கள் பல்வேறு பிரச்சினை களை எழுப்பி வருகின்ற னர்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *