‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆலோசனைக் கூட்டம்

1 Min Read

டில்லி, டிச. 14- குடியரசுத் தலைவரைச் சந்திப்பது குறித்து இந்தியா கூட் டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்
நேற்று (13.12.2023) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. அவர்கள் பார்வையாளர் மாடத் தில் இருந்து மக்களவைக் குள் குதித்து கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் குப் பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது.
அதையொட்டி அந்த நபர்கள் கைது செய்யப் பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது,
மேலும் நாடாளு மன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட் டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களி டம் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்ற னர். இவ்விரு நிகழ்வுக ளும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளு மன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண் டும் என்று வலியுறுத்த உள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப் பது தொடர்பாக இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பி னர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடை பெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *