இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

1 Min Read

புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர் நேற்று (13.12.2023) மாலை சிறைபிடித்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டி னத்தை சேர்ந்த மீனவர்கள் நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (26), குமார் (32) ஆகிய 6 பேர் ஒரு விசைப் படகில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே மாலை மீன்பிடித்து கொண்டி ருந்த போது, அந்த வழியாக வந்த இலங்கை கடற் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 6 பேரையும் கைது செய்து படகுடன் இலங்கை காங் கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகை, காரைக் கால் மீனவர்கள் 25 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். தற்போது புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிக்கப் பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *