சத்தீஸ்கர் புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே மாவோயிஸ்ட் தாக்குதல் – வீரர் உயிரிழப்பு

viduthalai
1 Min Read

தந்தேவாடா, டிச.14 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் (12.12.2023) இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். நேற்று காலை 11 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டி ருந்த போது மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதில் சிஏஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இறந்த வீரரின் பெயர் கமலேஷ் சாகு, அவர் சிஏஎஃப் பிரிவின் 9-ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொரு வீரர் வினய் குமார் சாகு, சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்த கமலேஷ், சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *