கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி

viduthalai
1 Min Read

திருவனந்தபுரம்,டிச.14- கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பதிவான மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளா வில் 230 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *