பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

1 Min Read

புதுடில்லி, டிச. 13- பல்கலைக்கழக சட் டத்திருத்த மசோதாக்களை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளு நரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு பல்கலைக்கழகங் களில் துணை வேந்தராக முதல மைச்சரே இருக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாக்களை, சட்டசபை யில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு ஆளுந ரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நீண்டநாள் கிடப்பில் இருக்கும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பல் கலைக்கழக சட்டத் திருத்த மசோ தாக்களை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் ஆர் என்.ரவி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த நடவடிக் கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கெனவே ரிட் மனுவில் கோரிக்கைகளை திருத்தம் செய்ய தலைமை நீதிபதி யிடம் அனுமதிகோரியுள்ளார்.

அதில், பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை அரசமைப்பு சட் டத்திற்கு முரணானது, சட்ட விரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது என அறிவிக்க வேண்டும்.

மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததை ரத்து செய்ய வேண்டும். சட்டசபை யில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதி பதி தலைமையிலான அமர்வு முன் இன்று (13.12.2023) விசாரணைக்கு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *