தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சிபிஅய் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் ஆணை

2 Min Read

சென்னை, டிச.13 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டதா, இல்லை கை விடப்பட்டதா என்பது குறித்து சிபிஅய் விளக்க மளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக் கிச்சூடு நிகழ்வு தொடர் பாக தாமாக முன்வந்து விசாரணை மேற் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (12.12.2023) மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது சிபிஅய் தரப்பில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதார ரான ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிபிஅய் தாக்கல் செய் துள்ள குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக விசா ரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவ டிக்கை மட்டும் எடுத் துள்ளது.அவர்களுக்கு எதிராக எந்த குற்ற நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இந்த வழக்கை சிபிஅய் முறை யாக விசாரிக்கவில்லை என்பதால் மீண்டும் சிபிஅய் விசாரிக்க அனு மதிக்கக்கூடாது. எனவே தமிழ்நாடு அரசே சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண் டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வில் பலர் இறந் துள்ள நிலையில் ஒரே ஒரு காவல்துறை அதி காரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல் துறையினருக்கு எப்படி நற்சான்று வழங்க முடிந்தது என சிபிஅய் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஅய் தரப்பில், அந்த குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள் ளதால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று விளக்கம் அளிக் கப்பட்டது. அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் 10 ஆண்டுகளாகும் என கருத்து தெரிவித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதி ராக நடவடிக்கை எடுக் கப்பட்டதா அல்லது கை விடப்பட்டதா என விளக்கமளிக்க சிபிஅய் தரப்புக்கு உத்தரவிட் டனர்.
மேலும், சிபிஅய் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு விசார ணையை வரும் டிச.19-க்கு தள்ளிவை த்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *