‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல – பெரியாரின் பேரன்கள்!”

2 Min Read

அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

சென்னை, நவ.25 ‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல – பெரியாரின் பேரன்கள்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘திராவிட மாடல்’ அரசு மீது குறை சொல்ல முடி யாததால் ஏதாவது கட்டுக்கதைகளைக் கூறி 

தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினம் தினம் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். 

அண்மையில்கூட ஆவின் பாலை பரி சோதனை செய்ததாகவும், அதுவும் ‘பெட்’ பாட்டி லில் கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி யுள்ளார். 

ஆனால், ஆவின் நிறுவனம் ‘பெட்’ பாட்டில் எதையும் விற்பனை செய்யவில்லை என்பது கூட அண்ணாமலைக்குத் தெரியவில்லை. ஆவின் நிறுவனம் விற்பனை செய்யாத ஒரு பாலை அண்ணாமலை எப்படி பரிசோதனை செய்தார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர் களும் பதிலடி கொடுத்து விட்டார். மேலும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத நிறுவனமாக ஆவின் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அண்ணாமலை போன்றவர்கள் வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டை பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லை என்றால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சரை மிரட்டி யுள்ளார். 

இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல” என்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்ச் கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையைத் தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பால் உற்பத்தி யாளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்பு கள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக் காக உழைப்பவர்கள்” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *