ரயில் பயணிகள் கவனத்திற்கு இதையெல்லாம் பண்ணிடாதீங்க.. மீறினால் 1000 ரூபாய் அபராதம்..!

2 Min Read

புதுடில்லி,டிச.11- ரயில் பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இப்போது அவற்றை மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய ரயில்வே பய ணிகளுக்காக பல விதி களையும் புதிய வசதி களையும் கொண்டு வரு கிறது. தினமும் லட்சக் கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்ய பயணச்சீட்டு வாங்குவது அவசியம். நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில் வேயின் சில முக்கியமான விதிகளை நீங்கள் அறிந் திருக்க வேண்டும்.
இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் அபரா தம் செலுத்த வேண்டி யிருக்கும். ரயில்வே விதி களின்படி ஒருவர் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால்

அதிகபட்சமாக ரூ.1000 அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப் படும். அபராதம் குறைந்த பட்சம் ரூ.250 ஆக இருக்கலாம்.
ஒரு பயணி வேறு ஏதேனும் ஒரு கோச்சின் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு பயணித்தால், பின்னர் பயணச்சீட்டு களுக்கு இடையேயான வித்தியாசம் வசூலிக்கப் படுகிறது. இதிலும் கூடு தல் கட்டணம் ஜிஜிணி ஆல் விதிக்கப்படலாம். ஒரு பயணி ஸ்லீப்பர் கோச் பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு ஏசி கோச்சில் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள் வோம்.
எனவே இரண்டு பயணச் சீட்டுகளுக்கு இடையே உள்ள வித்தி யாசத்தை செலுத்த வேண்டும். ஒருவர் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தால், அவரி டமிருந்து ரூ.500 அப ராதம் விதிக்கப்படும். அவரும் ரயிலில் இருந்து அகற்றப்படுவார். குடி போதையில் பயணம் செய் பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஒருவர் இணைய வழி யில் பயணச்சீட்டு முன் பதிவு செய்து, பயணத்தின் போது அடையாள அட் டையை எடுத்துச் செல்ல வில்லை என்றால், பயணச்சீட்டு இல்லாத பயணியை ஜிஜிணி பரிசீலித்து அபராதம் விதிக்க லாம். யாரேனும் அவ சரம் இன்றி அல்லது சரியான காரணமின்றி ரயிலின் சங்கிலியை இழுத்தால், அவர் குற்ற வாளியாகக் கருதப்படு வார்.
அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபரா தம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ரயி லில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை யில், யாராவது புகை பிடித்தால், 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *