ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம்

2 Min Read

புதுடில்லி, டிச. 10- ‘மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளிக்கும் வகையில் ஆளு நர்களை நியமிக்கும் அதி காரத்தை மாநிலங்க ளுக்கு வழங்க அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று மாநி லங்களவையில் கேரளத் தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் வி.சிவதாசன் வலி யுறுத்தினார்.

கடந்த 9-ஆம் தேதி அவர் அறிமுகம் செய்த, ஆளுநரை நியமிக்கும் காலனிய ஆட்சிக்கால நடைமுறையை முடிவுக் குக் கொண்டு வரும் வகையிலான ‘அரசமைப்பு சட்டத் திருத்த (பிரிவு 153 மற்றும் 155,156-இன் துணைப் பிரிவுகள் திருத்தம்) மசோதா 2022’ என்ற தனிநபர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உறுப்பினர்களை சிவ தாசன் கேட்டுக்கொண் டார்.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்த அவர், ‘மாநில ஆளுநர்களை, ஒன்றிய அரசின் பரிந்து ரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமிக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்பது மக்களின் விருப் பம். அந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், ஆளுநர்களை மாநிலங் களே நியமித்துக்கொள்ள அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டும். கூட் டாட்சி என்பது தேசத் தின், அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படை கட் டமைப்பு. ஆனால், மாநில அரசுகளின் அதி காரங்களைக் குறைக்கும் முயற்சியையே ஒன்றிய பாஜக அரசு 24 மணி நேரம் செய்துவருகிறது. ஒன்றிய அரசின் தீர்மா னங்களை நிறைவேற்றும் கருவியாக ஆளுநர்கள் பயன்படுத் தப்படுகின் றனர். இந்த காலனி ஆட் சிகால நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பாஜக உறுப்பினர் அனில் அகர்வால், ‘ஜன நாயக நடைமுறையில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானது. எனவே, இந்த மசோதாவை சிவ தாசன் கைவிட வேண்டும். உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கக் கூடாது’ என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தையா பேசுகை யில், ‘சர்க்காரியா ஆணை யக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஆளுநரை நியமிப்ப தற்கு முன்பாக மாநில அரசுடன் கலந்தாலோ சிக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக, 70 தனி நபர் மசோதாக்கள் மாநி லங்களவையில் அறிமு கம் செய்யப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *