மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, டிச. 9- மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
அறிக்கை வருமாறு:

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப் பொழிவின் காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல முன்னெடுப்புகளை இரவு பகல் பாராமல் எடுத்து வரும் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக் கும் மற்றும் மாநில அமைச்சர் களுக்கும், பேரிடர் மேலாண்மை ஊழியர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும், தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங் கம் மனமார வாழ்த்து கூறி நன்றி பாராட்டுகிறது.
மேலும் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கைகளை முனைப் போடு எடுத்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசோடு கைகோர்க்க அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பி னர்களும், புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவிட தங்க ளின் ஒரு நாள் ஊதியத்தை மன முவந்து வழங்க முன்வந்துள்ளனர்.

பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புயலால் அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உத விடும் வகையில் தமிழ்நாடு அர சுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இது சிறு உதவியாக இருக்கும் என கருதுகிறோம் .

எனவே எங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற் குரிய தகுந்த செயல்முறைகளை வெளியிட்டு புயலால் பாதிக்கப் பட்ட மக்களை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வதற்கு, உதவிடும் வகையில் உரிய ஆணை பிறப்பிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அன் போடு கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து எங்களின் முறை யான கடிதத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம். கடந்த காலங்களில் எப்போதெல்லாம் பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங் கள் நடைபெற்றதோ அப்பொழு தெல்லாம் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்கி மக்க ளோடு களத்தில் நின்றிருக்கி றோம்.
ஏன் கடந்த கரோனா பேரிடர் காலங்களில் கூட எங்கள் ஒரு நாள் ஊதியத்துடன் எங்கள் பேரியக்கத்தின் சார்பாக (1,50,3 0,127) ஒரு கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 127 ரூபாய் வழங்கியிருக்கிறோம் என்பதையும் இது போன்ற பேரிடர் காலங்களில் இன்றும், அன்றும், என்றென்றும் தமிழ் நாட்டு மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முதலில் முன்வந்து களத் தில் இருக்கும் என்பதை பெரு மை யோடு தெரிவித்துக்கொண்டு தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலன் சார்ந்து எங்கள் அமைப்பு பயணிக்கும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *