‘தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்’ – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (27.10.2023) வெளியிடப்பட் டுள்ளது.  அதன்படி தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர் களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

தமிழ்நாடு முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 18,016 பேர் உள்ளனர். 

அதிகபட்சமாக சோழிங்கநல் லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். 

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 

நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். 

விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிச. 9-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தப் படிவங்கள் அனைத் தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இறுதி வாக் காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.  மேலும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *