திருப்பதி, டிச.9 ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலி காப்டரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கூறுகையில், “மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை யான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உறுதுணையாக நிற்கும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திராவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 வெள்ள நிவாரணம் முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு
Leave a comment