பட்டியலின – பழங்குடி பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு

2 Min Read

புதுடில்லி,டிச.8- மோடி ஆட்சியில் பட்டியல் – பழங்குடி யினர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித் துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆண்டு குற்ற அறிக்கையையும், இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் தொடர்பான அறிக்கையையும் டிசம்பர் 3 அன்று வெளியிட்டது. இதில், ஒட்டு மொத்த குற்ற விகிதம் 2021-இல் 7 சதவிகித மாக இருந்தது, 2022-இல் 6.9 சதவிகித மாக சுமார் 0.1 சதவிகிதம் குறைந்துள் ளது என்றாலும், நரேந்திர மோடி தலைமை யிலான ஆட்சியில், பெண்கள் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சைபர் குற்றங்கள், 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரிப்பு 2022-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,45,256 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-அய் விட நான்கு சதவிகிதம் அதிகம். 2022-ஆம் ஆண்டு பிபிசி நிறுவனம் உலக சுகாதார அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் “உல களவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதாகவும் இந்த எண்ணிக்கை யும் இந்தியாவின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கூறியுள்ளது”.

2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது 2016-ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளில் 26.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.3% அதிகரிப்பு 2022-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1,62,449 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 8.7 சதவிகிதம் அதிகம்.
மூத்த குடிமக்கள், எஸ்.சி., எஸ்.டி.-க்களுக்கு எதிரான மற்றும் பொருளாதாரம் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல்) மீது 28,545 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது, 2021-ஆம் ஆண்டை விட (26,110 வழக்குகள்) 9.3 சதவிகிதம் அதிகம். எஸ்.சி.-எஸ்.டி. -ளுக்கு எதிரான குற்றங்கள் 13.1% அதிகரிப்பு – பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்களுக்காக மொத்தம் 57,582 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 13.1 சதவிகிதம் (50,900 வழக்குகள்) அதிகம். பட்டியல், பழங்குடியினருக்கு எதிராக குற்றம் செய்ததற்காக மொத்தம் 10,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 14.3 சதவிகி தம் (8,802 வழக்குகள்) அதிகம். சைபர் குற்றங்களின் கீழ், 65,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2021-ஆம் ஆண்டை விட 24.4 சதவிகிதம் அதிகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *