கல்லக்குடியில் ஏ.டி.எம். மய்யம் திறப்பு

viduthalai
1 Min Read

அரியலூர், டிச. 7- அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் (டால்மியாபுரம்) திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபனின் இந்தியா ஒன் ஏ.டி.எம் நிலையத்தை 5-12-2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்விற்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார்.

திராவிடர் கழக காப்பாளர் மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலா ளர் இரத்தின.ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் செந்துறை சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, ஜெயங்கொண்டம் இளைஞரணி தலைவர் பெரியார் செல்வன் ஆகியோர்முன்னிலையேற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன் அனை வரையும் வரவேற்றார் இடத்தின் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் நிறுவன ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *