நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் இந்தி யாவில் உள்ள கிராமப்புற பெண் கள் அதிக பயன்பெற்று வருகின்றனர்.

2005ஆ-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப் பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு அதி கரித்துள்ளது. கிராமப்புற பொரு ளாதாரம் உயர்ந்தது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து தொழிலாளர் களுக்கும் இந்த திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு 60 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவு ஆகும்.

நிதி குறைப்பால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகி உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *