பா.ஜ.க. வென்றதும் துவங்கியது கலவரம் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதவிப் போட்டியில் நடத்திய கொலை!

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர், டிச. 6- ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறிராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் சிறி ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலை வர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப் பில் இருந்து பிரிந்து 2015ஆம் ஆண்டு சிறி ராஷ் டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பு 2018ஆம் ஆண்டு வெளி யான பத்மாவதி திரைப் படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி யது. இதனிடையே, சிறி ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக் தேவ் சிங் நேற்று (5.12.2023) ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் 3 பேர் கொண்ட கும்ப லால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுக்தேவ் சிங்கின் வீட்டிற்கு வந்த 3 பேர் அவருடன் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத் திருந்த துப் பாக்கியால் சுக்தேவ் சிங் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சிய டைந்த சுக்தேவ் சிங்கின் பாதுகாவ லர் நடத்திய பதில் துப் பாக்கிச்சூட்டில் தாக்குத லில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய 2 பேர் தப்பி யோடினர். இந்த சம்பவம் ராஜஸ் தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலை யில், சுக்தேவ் சிங் சுட்டுக் கொல்லப் பட்டதை கண் டித்து சிறி ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ் தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத் துள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *