மும்பையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா!

2 Min Read
இந்தியா

மும்பை, டிச. 6- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா டிசம்பர் 02 அன்று மாலை 7:00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது

விழாவுக்கு மும்பை திரா விடர் கழக தலைவர் பெ. கணே சன் தலைமை வைத்தார், முன் னதாக கழகத் தோழர் அய். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்

ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட கேக்கை நெல்லை மாவட்ட திராவிடர் கழக காப் பாளர் பெரியார் பெருந்தொண் டர் சி.வேலாயுதம் வெட்டி னார்.

தொடர்ந்து கூட்டத் தலை வர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 80- ஆண்டு பொது வாழ்க்கையில் சமூக நீதிப் போராட்டங்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறு வனத்தின் அறப்பணிகள் .60 ஆண்டுகால ”விடுதலை ”ஆசிரி யர் பணி மற்றும் புதிய வெளி யீடுகள், பெரியார் அவர்களை உலகம் முழுக்க கொண்டு செல் லும் ஆற்றல்மிக்க தலைவர் என்றும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா,  சுயமரியா தைக்காரர் கலைஞர் போன்ற வர்கள் ஆசிரியர் அவர்கள் குறித்து சொன்ன கருத்துக்க ளையும் நினைவு கூர்ந்து பேசி னார்,       தொடர்ந்து பெரியார் பெருந்தொண்டர் சி .வேலா யுதம் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் தாராவி கிளைச் செயலா ளர் ஞான.அய்யாப்பிள்ளை, இதயம் அறக்கட்டளை தலை வர் அ .மகேந்திரன் திராவிடர் கழகத் தோழர் பெரியார் பாலாஜி, மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி.சண்முகரா ஜன் தோழர் க.வளர்மதி உரைக் குப்பின் மும்பை திராவிடர் கழகச்செயலாளர் இ.அந் தோணி நிறைவாக  உரையாற் றினார்

இந்த விழாவில் மூலூண்ட் ஆ.பாலசுப்ரமணியம், சோ. ஆசைத்தம்பி,இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் பி. சந் திரன் பெருமாள், பூ.சு.அழகர் இராஜா, மகிழ்ச்சி மகளிர் பேரவை தோழர் வனிதா இளங்கோவன், மீராரோடு வே.மணி, திமுக தோழர் அலி முகமது, க. அறிவுமதி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித் தனர் இறுதியில் மும்பை திரா விடர் கழகத் துணைச் செயலா ளர் ஜே .வில்சன் நன்றி கூறி னார் கழகத்தோழர் பெரியார் பாலாஜி சார்பில் கேக் ,தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *