வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு 14 நாள் கெடு!

1 Min Read

5 மாநில தேர்தலில் பாஜ, ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தி உட்பட 21 எம்.பி.க்களை களமிறக்கி உள்ளது. 

இதில் ராஜஸ்தான், மபியில் தலா 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டீஸ்கரில் 4, தெலங்கானவில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட்டனர். இவர்களில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த 14 நாள்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

அவ்வாறு செய்யாதபட்சத்தில் 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். சட்டமன்ற உறுப்பினராகத் தொடரலாம் என அரசமைப்புச் சட்டத்தின் 101 ஆவது பிரிவின் விதியில் கூறப்பட்டிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *