மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்!
புதுடில்லி, டிச. 5 தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5000 கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ஒன்றிய அரசு நிதி வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் திருச்சி என்.சிவா கூறியுள்ளார்.